full screen background image

ஒர் இரவில் நடக்கும் திரில்லர், டிராமா கலந்த திரைப்படம் “மனிதர்கள்”..!

ஒர் இரவில் நடக்கும் திரில்லர், டிராமா கலந்த திரைப்படம் “மனிதர்கள்”..!

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”.

இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து – இயக்கம் – இராம் இந்திரா, ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை – அனிலேஷ் எல் மேத்யூ, படத்தொகுப்பு – தின்சா, கலை – மகேந்திரன் பாண்டியன், பாடல் – கார்த்திக் நேத்தா, ஒப்பனை – அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு – தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா.யுவராஜ், உதவி இயக்கம் – லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி – வின் வீரா, ஒளிக்கலவை – ஆனந்த் இராமச்சந்திரன், சப்தம் – சதீஷ், வண்ணம் – வசந்த் செ கார்த்திக், வரைகலை – ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு – ரிவர் சைடு ஹவுஸ். தயாரிப்பு (producers) – இராஜேந்திர பிரசாத், நவீன், மு.கி.சாம்பசிவம். (Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures)  பத்திரிக்கை தொடர்பு – சதீஷ், சிவா (AIM).

ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

படம் குறித்து இயக்குநர் இராம் இந்திரா பேசும்போது, “இது நண்பர்களின் உதவியால், கிரவுட் ஃபண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக் குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்தப் படம்.

ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளோம்.

இது முழுக்க இரவில் நடக்கும் கதை. இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது, நீங்கள் நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளோம்.

திண்டுக்கல் என் சொந்த ஊர் என்பதால் அங்கேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்தோம். என் ஊர் மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்…” என்றார்.

இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப் பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் தயாரிப்பாளர் சி.வி. குமார் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

சகதிக்குள் மல்லுக்கட்டும் மனிதர்களை வித்தியாசமான களத்தில், காட்சிப்படுத்தியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், திரை ஆர்வலர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

இப்படத்தின் முழுப் பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் திரைக்குக் கொண்டு வரப் படக் குழு திட்டமிட்டுள்ளனர். திரையரங்கு வெளியீட்டுத் தேதி, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

 

Our Score