full screen background image

‘மாநகரம்’ திரைப்படம் காலம் கடந்தும் பேசப்படவிருக்கும் படைப்பு

‘மாநகரம்’ திரைப்படம் காலம் கடந்தும் பேசப்படவிருக்கும் படைப்பு

‘மாயா’ ‘காஷ்மோரா’வின் வெற்றிகளை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படம் ‘மாநகரம்’.

இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி மற்றும் முனிஸ்காந்த்  ராமதாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாயகியாக ரெஜினா கசான்ட்ரா  நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – செல்வகுமார், இசை – ஜாவித், சண்டை பயிற்சி – அன்பறிவு, தயாரிப்பு – பொடன்ஷியல் ஸ்டுடியோஸ், இயக்குநர் – லோகேஷ் கனகராஜ்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர், சென்னை என்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள்..? அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே படத்தின் கதைக் கரு.

கதையின் முக்கிய புள்ளிகளான நால்வரும், வெவ்வேறு ஊர்களில் இருந்து தங்களுடைய வேலைக்காக சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் நால்வரின் எதிர்பார்ப்பை த்ரில்லர் பாணியில் அமைத்துள்ளார்கள். நான்கு பேர் கதையிலும் ஓர் உள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் தொடர்புக்கு ‘ஹைபர் லிங்க்’ எனும் புதுமையான திரைக்கதை யுக்தியை அமைத்துள்ளார் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ். குறும்பட இயக்குனரான இது இவரின் முதல் படைப்பாகும்.

மாயா, காஷ்மோரா வரிசையில் வெற்றி பெற காத்திருக்கும் இந்த ‘மாநகரம்’ படம் வரும் மார்ச் 10-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.

இந்த ‘மாநகரம்’ படத்தை பிரபல படத் தொகுப்பாளரான கே.எல்.பிரவீன் பெரிதும் பாராட்டியுள்ளார்.

k.l.Praveen-1

இது குறித்து அவர் பேசும்போது, “நேற்று எனக்கு ‘மாநகரம்’ திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இளம் குழு ஒன்று மிக தெளிவான முறையில், தரமான வகையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது.

படம் ஆரம்பமாகும் முதல் பிரேமில் இருந்து இறுதிவரை படம் நம்மை கட்டி போடுகிறது என்பதுதான் உண்மை. இப்படத்தை பொறுத்தவரை கதையும் – படத்தை உருவாக்கியுள்ள விதமும் நம்மை வியக்க வைக்கிறது.

ஒரு எமோஷனலான காட்சியை பேப்பரில் எழுதிவிட்டு அதை படமாக எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இயக்குநர் லோகேஷ் அவருடைய பாணியில் மிகச் சரியாக செய்துள்ளார்.

இந்தப் படத்தில் சார்லி சார், சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, முனிஸ்காந்த் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் படத் தொகுப்பு மூன்றுமே மிகப் பெரிய அளவில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. நிச்சயமாக இந்தப் படம் காலம் கடந்து பேசப்படும் படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மாயா, ஜோக்கர், காஷ்மோரா இப்போது மாநகரம். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தென்னகத்தின் UTV Spot Boy என்று நம்மை பாராட்ட வைக்கிறது.

தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரை இப்படத்தை தயாரிக்க முடிவெடுத்ததற்காகவே நாம் பாராட்டியாக வேண்டும்.

இப்படத்தின் மொத்த குழுவையும் இந்த மிகச் சிறந்த முயற்சிக்காக நான் பாராட்டுகிறேன். சினிமாவை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் ‘மாநகரம்’.

இந்தப் படத்தை நிச்சயம் பார்த்து ரசியுங்கள். ‘மாநகரம்’ உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்…” என்று பாராட்டியிருக்கிறார். 

Our Score