நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 23-வது படம் இன்று துவங்கியது.
டான் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் L.கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் இந்தப் புதிய படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் பூஜையுடன் நடந்து முடிந்தது.
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23-வது படம் இது. இந்தப் படத்தில் வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.
கிராமத்துக் கதையாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் நடைபெறுகிறது.
இன்று காலை நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜை விழாவில் இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் C.S., கலை இயக்குநர் பாப்ப நாடு C.உதயகுமார், எடிட்டர் வெற்றி கிருஷ்ணன், மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் துவக்க விழாவில் ‘கழுகு’ படத்தின் இயக்குநர் சத்யசிவா கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தைத் துவக்கி வைத்தார்.
“சஸ்பென்ஸ், மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இத்திரைப்படம் இருக்கும்” என்கிறார் படத்தின் இயக்குநரான அப்பாத்துரை பாரதிராஜா.
Our Score








