‘கத்தி’ மற்றும் ‘புலிப்பார்வை’ படங்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகமும் எதிர்ப்பு அறிவித்துள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவரான கோவை ராமகிருஷ்ணன் நேற்று இது குறித்து அளித்த பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
“இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, கலாச்சாரம் மற்றும் வணிகத் துறை மூலம் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறார். அதை தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஒருபோதும் அனுமதிக்காது. பாலகன் பாலச்சந்திரனை ‘குழந்தைப் போராளி’ போல தவறாக காட்டியுள்ள ‘புலிப் பார்வை’ படத்தை வெளியிடும் முயற்சி தொடர்ந்தால், அதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கடும் போராட்டத்தை நடத்தும்.
மேலும், 2 லட்சம் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபக்சேவின் கூட்டாளியான லைகா நிறுவனத்தினர் தயாரிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து போராடும் மாணவர் இயக்கங்களுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் முழ ஆதரவு அளிக்கும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கத்தி’ கடைசியில் ஈழ ஆதரவு இயக்கங்களையே கூறு போட்டுவிட்டது..!