full screen background image

‘கோ’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது..!

‘கோ’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது..!

சமீப காலங்கலில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் ‘Sequel’ படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகின்றன.

நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை தயாரித்துவரும் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம். தங்களது முந்தைய படமான ‘கோ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க எண்ணியுள்ளனர்.

இது குறித்து பேசிய RS இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட்குமார்,  “எங்கள் நிறுவனத்தின் சார்பில் ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாய் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் இயக்குநர்கள் விஷ்ணுவர்த்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய்ப் பணிபுரிந்துள்ள சரத்தின் கதையை கேட்க நேர்ந்தது.

கதையைக் கேட்டு முடிக்கும் முன்னர் இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.  ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றில்லாமல் இந்தக் கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளதே என்று யோசித்தோம். அதன் விளைவாகவே ‘கோ-2’ திரைப்படம் விரைவில் தயாராகவுள்ளது.

அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கனகச்சிதமாய் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு கண்டிப்பாய் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். ‘கோ’ திரைப்படத்திற்கு அளித்த ஆதரவிற்கு மீடியாக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். 

Our Score