full screen background image

குடியினால் பாதிக்கப்படும் பெண்ணின் கதையைப் பேசும் ‘கருவேலம் பூக்கள்’ திரைப்படம்

குடியினால் பாதிக்கப்படும் பெண்ணின் கதையைப் பேசும் ‘கருவேலம் பூக்கள்’ திரைப்படம்

Zoom In S Film Factory நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ராஜ்குமார், பி.முனியன், ஆர்.பாப்பம்மாள் மூவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கருவேலம் பூக்கள்’.

படத்தில் நாயகனாக தூயவனும், நாயகியாக சவுந்தர்யா ராயும் அறிமுகமாகியுள்ளனர். மேலும், பூவிதா, யுவராணி, அலெக்ஸ், நெல்லை சிவா, வீட்டு ராஜா, ஜி.தனம், வீரக்குமார், ஜான் ஜெயமாலா, ப.பேட்டை ஏ.சேட்டு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நேமம் – வி.சிவானந்தம், கலை – டி.மகிபாலன், இசை – சரண் பிரகாஷ், படத் தொகுப்பு – ஆர்.டி.அண்ணாதுரை, ஸ்டில்ஸ் – சங்கர், தயாரிப்பு – எம்.ராஜ்குமார், பி.முனியன், ஆர்.பாப்பம்மாள், நிர்வாகத் தயாரிப்பு – டி.ஏ. ஜவஹர்தாசன், எழுத்து, இயக்கம் – டி.ஏ.வினோபா.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.ஏ.வினோபா, “ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. மதுப் பழக்கத்திற்கு ஆளான ஒருவனால் அவனது குடியினால் வாழ்க்கையே திசை மாறிப் போகிறது. அவனாலும், அவனது குடியினாலும் பாதிக்கப்பட்ட பெண் ஒரு புரட்சியையே ஏற்படுத்துகிறாள். இதன் விளைவுகளை பின்னணியாகக் கொண்டு ஜனரஞ்சகமான முறையில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சி மிகவும் கவர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கவிஞர் ச.அன்பழகன் எழுதிய ‘அக்கக்கா அக்கக்கா… உன் அப்பா மண்டு எங்கக்கா’ என்கிற பாடலை கானா பாலா பாடியுள்ளார்.

இந்தப் பாடல் சமீபத்தில் ஏலகிரி பகுதியில் படமானது. இந்தப் பாடல் காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.

Our Score