full screen background image

“நான் சொன்ன திருத்தங்களை ஏற்றதால்தான் ‘கடுக்கா’ படத்தை வெளியிடுகிறேன்” – தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளிப்படை பேச்சு

“நான் சொன்ன திருத்தங்களை ஏற்றதால்தான் ‘கடுக்கா’ படத்தை வெளியிடுகிறேன்” – தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளிப்படை பேச்சு

Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு  அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் கடுக்கா’.

இந்தப் படத்தில் விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் : S.S.முருகராசு, இசையமைப்பாளர்: கெவின் டெகோஸ்டா, ஒளிப்பதிவாளர்: சதீஸ் குமார் துரைக்கண்ணு, எடிட்டர் : M.ஜான்சன் நோயல், தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான், நடன அமைப்பாளர்: அபேப் R.K
இணை இயக்குநர்: R.ஐய்யனார், ரமேஷ் பாஷா இணை இயக்குநர்: சரண் K.ஆறுமுகம் உதவி இயக்குநர்
கள் : ஆறுமுகம், பிரதாப் சிங். DI: கலர் வேவ்ஸ்
கலரிஸ்ட்  : ராகவன், VFX: Issls ஸ்டுடியோ, உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர், உதவி
இயக்கம் : லோகேஷ்ராஜா, சாம்ராஜா, விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ், விநியோகம் : G.தனஞ்செயன், பத்திரிக்கை தொடர்பு – கேப்டன்  M.Pஆனந்த்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக் குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசும்போது, “எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது. “இந்தக் கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்ததற்கு நன்றி. இரண்டு பாடல்களில் ஒன்றை தேவா சார் பாடி இருப்பது எனக்கு பெருமை. டீசருக்கான பாடலை ஒரு வில்லுப் பாட்டு போன்று 20 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தேன். கதாநாயகி பற்றி நான் எழுதி இருந்த பாடல் வரியை குறிப்பிட்டு தேவா சார் பாராட்டினார். தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்குவது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல பெரிய விஷயம்” என்றார்.

இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா பேசும்போது, “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி.. என் இசையில் பாடிய இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு நன்றி.. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.

நடிகர் சௌந்தர்ராஜா பேசும்போது, “இந்தக் ’கடுக்கா’ மிகச் சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். இது குறித்து தயாரிப்பாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். படக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.

இயக்குநர் S.S.முருகராசு பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச் சிறந்த படம். இனி நீங்கள்தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும். அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பேசும்போது, “என் நண்பன் விஜய் கௌரிஷை ஹீரோவாக்க வேண்டும் என்றுதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். அதிலும் இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஏன் நடிக்கிறாய் என கேட்டேன். என்னுடைய தயாரிப்பான கடாவர்’ சீரிஸில் துணை நடிகராகத்தான் தன் வாழ்க்கையை அவன் ஆரம்பித்தான். அவன் சின்ன சின்னதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியுள்ளான். இது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய படம். அவன் எது  செய்தாலும் சரியாக இருக்கும்.

இந்தப் படத்தில் இசை மிகச் சிறப்பாக வந்துள்ளது. படம் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார் என்றவுடன் சந்தோசமாகிவிட்டது. இனி அவர் இப்படத்தை எடுத்துச் சென்று விடுவார். கௌரிஷ்  பல சமூக அக்கறைமிக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்னொரு விஜய் சேதுபதியாக வருவான்.. இயக்குநர் அவ்வளவு அழகாக இப்படத்தினை எடுத்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் C.V.குமார் பேசும்போது. “இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது என்னுடைய ‘அட்டகத்தி’ படத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. சின்ன படங்கள் எடுப்பதில் படம் எடுப்பதைத் தாண்டி படத்தை விளம்பரப்படுத்துவதில்தான் இருக்கிறது. அதை மிகச் சிறப்பாக தனஞ்செயன் சார் செய்து வருகிறார்.. அவர் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. படக் குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்…” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “கடுக்கா’ படத்தை வாழ்த்த நிறையப் பிரபலங்கள் வந்துள்ளார்கள். படக் குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்து விட்டார்கள். பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் இந்த தயாரிபபளர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

தமிழ்ச் சினிமாவில் நாம் சரி செய்ய வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு ஷோ தருகிறார்கள், எந்த ஷோவில் நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால் அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர்கள் இருக்கும். ஆனால் இப்போது ஒரே படத்தை எல்லாத் தியேட்டரிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை விடாமல் செய்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 ஷோ தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள்தான் பெரிய வெற்றியைத் தரும். இந்தக் கடுக்காதிரைப்படம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

நாயகன் விஜய் கௌரிஷ் பேசும்போது, “மேடையில் இருப்பவர்கள் அனைவருமே என்னுடைய இன்ஸ்பிரேஷன்தான். அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தேவா சாருக்கு நன்றி. இப்பாடலுக்கு வரவேற்பை ஏற்படுத்தித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

இசையமைப்பாளர் எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தில் எல்லோருமே எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். டிரெய்லரில் காட்டாத ஒரு விசயத்தைப் படத்தில் வைத்துள்ளோம். கதையில்தான் பிரம்மாண்டத்தை வைத்துள்ளோம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். நாங்கள் நல்ல படம் தந்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப் படத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா’ என்றால் காய் இல்லை. நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் ‘கடுக்கா’.

படத்தில் இரண்டு ஹீரோக்கள். அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பதுதான் படம். ஆனால், ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத்தான்.  இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை.

சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள  சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை.

இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டக்கத்தி’ தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். ‘கடுக்கா’ ஆடியன்ஸை ஏமாற்றாது. ‘கடுக்கா’ சின்ன டீம் செய்துள்ள நல்ல படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “இப்படம் ‘அட்டக்கத்தி’ படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால்தான் C.V. குமாரை இந்த விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்களைப் பார்க்கிறேன்.. நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

அப்படி இந்தப் படத்தைப் பார்த்தபோதே சில திருத்தங்களை சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச் சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள். அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன்.

நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாளை நமதே படத்திற்கும் நான் உதவி செய்திருந்தேன் 50 லட்சத்தில்  எடுத்த அந்தப் படத்திற்கு மிகச் சிறப்பான ரிவ்யூ தந்தீர்கள். மிகப் பெரிய வெற்றியைத் தந்தீர்கள். அதே போல் இந்தப் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும்…” என்றார்.

Our Score