full screen background image

“ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை பரபரப்பாக இருக்கும்” – “ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் குறித்து தயாரிப்பாளர் பேட்டி..! 

“ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ்வரை பரபரப்பாக இருக்கும்” – “ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் குறித்து தயாரிப்பாளர் பேட்டி..! 

உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டாக்டர். ஐசரி கே.கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டாக்டர். ஐசரி கே.கணேஷ் இந்தப் படம் பற்றி கூறும்போது, “இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நாங்கள் தயாரித்த முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது எங்களின் இரண்டாவது படத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

இந்த ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் ஸ்டைலான ஆக்‌ஷன்-பேக்ட் படமாக தமிழ் பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் நிச்சயம் விருந்தாக அமையும். படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ்வரை ரசிகர்களை கவரும் படமாக இது இருக்கும்.

வருணுக்கு இது கனவு நனவாகும் தருணம். தன்னுடைய சிறப்பான முயற்சியை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்ட கிருஷ்ணாவுக்கு நன்றி.

ஹாலிவுட் சண்டை இயக்குநர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினர் பார்வையாளர்களைக் கவரக் கூடிய அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுத்துள்ளனர். இது அனைத்து வயதினருக்கும் ஒரு பெரிய விருந்தாக இருக்கும்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் நாளை தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

Our Score