full screen background image

‘இரும்புத் திரை’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்..!

‘இரும்புத் திரை’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்..!

விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் ‘இரும்புத் திரை’.

இப்படத்தில் கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ஆண்டனி L.ரூபன் படத் தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மித்ரன் பேசும்போது, “இந்த ‘இரும்புத் திரை’ படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும்போது, அவர் இந்த கதை பிடித்திருந்தால் ‘விஷால் பிலிம் பேக்டரி’யின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக  வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில்தான் கதையை கேட்டார்.

நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில்தான் நடிப்பேன்’ என்றார்.

vishal-mithran

நான்தான் அவரிடம் பேசி அவரை ‘ஹீரோ வேடத்தில்தான் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வில்லன் வேடம் வலிமையானதாக இருக்கும்.

விஷாலுக்காக படத்தில் நிறைய மாற்றங்கள் செய்தேன். முதலில் நம்மை போன்ற சாதாரணமான ஒரு கதாபாத்திரமாக இருந்த நாயகனின் கதாபாத்திரத்தை விஷாலுக்காக மிலிட்டரி மேன் கதாபாத்திரமாக மாற்றினேன்.

இந்தப் படம் சமூக வலைத்தளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களை பற்றியும், அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும், இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றியும் பேசும் படமாக இருக்கும். அதை நான் மிலிட்டரி பேக் டிராபை கொண்டு உருவாக்கியுள்ளேன்.

vishal

படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை பற்றி இப்போது கூற முடியாது. நிச்சயம் வழக்கம் போல் வரும் கதாநாயகியின் காதாபாத்திரம் போல் இல்லாமல், கதையில் முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கேரக்டர் இருக்கும்.

முதலில் விஷால் மட்டும் படத்தில் பெரிய ஸ்டாராக இருக்கட்டும். மற்றவர்களை எல்லாம் புதியதாக நாம் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் முடிவெடுத்திருந்தேன். ஆனால் விஷால் சார்தான் ‘படத்தை பெரியதாகவே பண்ணலாம். சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களையே படத்துக்கு கொண்டு வாங்க. படம் நல்ல வரணும். அவ்வளவுதான்…’ என்று எனக்கு கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார் விஷால். அவர் எனக்கு அளித்த ஊக்கம் மற்றும் சுதந்திரம் மிகப் பெரியது.

எனக்கு விஷாலிடம் பிடித்தது அவருடைய மல்டி டாஸ்கிங். ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக் கொண்டிருப்பார். பின்பு நடிகர் சங்க வேலை, தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து, செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளை செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைக்கிறார் விஷால்..” என்று ஆச்சரியத்துடன் பேசுகிறார் இயக்குநர் மித்ரன்.

 

Our Score