‘கோலி சோடா’, ‘வஜ்ரம்’, ‘பசங்க’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எதிர் கொள்.’
இந்தப் படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.அய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கதாநாயகியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளி வெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய் கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் லினிக்கர், பாடல்கள் – மணி அமுதன், சண்டை பயிற்சி – Danger மணி, கலை – தியாகு, நடனம் –சந்தோஷ், படத் தொகுப்பு – ஜோதி பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர், தயாரிப்பு -C.பழனி, R.அய்யனார், எழுத்து, இயக்கம் – ஆர்.அய்யனார்.
படம் பற்றி இயக்குநர் ஆர்.அய்யனார் பேசும்போது, “இது முழுக்க முழுக்க கிராமத்து கதை..! ப்ளஸ் டூ படிக்கும் ஒரு மாணவனுக்கும் 10-வது படிக்கும் மாணவிக்குமான காதல்தான் படமே. ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம்.
அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது. பொறுப்பில்லாதவனாக கருதப்பட்ட மகன், ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம், செஞ்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது..” என்றார்.