full screen background image

சத்யராஜ், வரலட்சுமி நடிக்கும் ‘எச்சரிக்கை’ திரைப்படம்

சத்யராஜ், வரலட்சுமி நடிக்கும் ‘எச்சரிக்கை’ திரைப்படம்

CP கணேஷ் மற்றும் Timeline cinemas சார்பாக சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்க இயக்குனரகள் மணிரத்னம் மற்றும் AR முருகதாஸ் ஆகியவர்களிடம் ‘கடல்’, ‘கத்தி’, ‘ஒ காதல் கண்மணி’ படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சர்ஜுன் K.M. இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘எச்சரிக்கை.’

த்ரில்லர் படமாக உருவாகும் இந்த ‘எச்சரிக்கை’ படத்தில் சத்யராஜ், வரலஷ்மி சரத்குமார், விவேக் ராஜ்கோபால்(புதுமுகம்), கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீநிவாசன், கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன், படத் தொகுப்பாளர் – கார்த்திக் ஜோகேஷ், இசை – சுந்தரமூர்த்தி K.S.

Poster Tamil (3)

‘எச்சரிக்கை’ படத்தின் கதை பணம், பேராசை மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக கொண்டதாக இருக்கும். இதில் இரு இணை கதைகள் ஒரு கட்டத்தை நோக்கியே நகரும். அதில் ஒன்று ஒரு குற்றத்தை பற்றியும், மற்றொன்று அதை புரிந்தவர்களை தேடுபவரை பற்றியும் இருக்கும். இந்த கதாபாத்திரங்களின் பின் கதையே இவர்களை கதையில் வழிநடத்தி செல்வது இப்படத்தின் ஒரு சிறப்பம்சமாகும். இக்கதையில், யாரையுமே நம்மால் கருப்பு, வெள்ளை என்று பாகுபடுத்திவிட முடியாதபடி, அவர்கள் ஒரு கலவையாகவே இருப்பதே ஓர் சிறப்பம்சமாகும்.

Poster Tamil (1)

கடந்த 20-ம் தேதி முதல் சென்னையிலிருக்கும் Mall தியேட்டர்களில் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்னும் வாசகம் காணப்பட்டது. இது திருடர்களிடமிருந்து கவனமாக இருக்க அரசு வெளியிட்டுள்ள வாசகமா..? அல்லது அரசியல் பிரச்சாரமா..? என்று யோசித்து கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் முதல் பார்வையை தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய இயக்குநர்களான திரு.மணிரத்னம், திரு.பாலா, திரு.A.R.முருகதாஸ் மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். 

முதல் பார்வை போஸ்டர் வெளிவந்த நேரத்திலிருந்தே இணைய தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் Teaser-ஐ  வரும் மே மாத ஆரம்பத்தில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் படக் குழுவினர்.

Our Score