ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் பேனரில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கஸ்டடி’.
இந்தப் படத்தில் நாக சைதன்யா நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, இயக்கம் – வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் – ஸ்ரீனிவாசா சித்தூரி, பேனர் – ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், வழங்குபவர் – பவன்குமார், இசை – மாஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், படத் தொகுப்பு – வெங்கட் ராஜன், வசனம் – அபூரி ரவி, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சிவா, மகேஷ் மாத்யூ, கலை இயக்கம் – D.Y.சத்யநாராயணா, பத்திரிகை தொடர்பு – வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா Done.
அக்கினேனி நாக சைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இந்தக் ‘கஸ்டடி’தான் அதிக பொருட் செலவில் உருவாகி வரும் படம்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தக் ‘கஸ்டடி’ படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புது வருடத்தை ஒட்டி வெளியான இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தற்போது அடுத்த அறிவிப்பாக படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை ‘ரேவதி’ என்று படக் குழு அறிவித்துள்ளது. அவரது கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு, ‘அழகும் திறமையும் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி ‘கஸ்டடி’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போஸ்டர் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் கதையில் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
இந்தக் ’கஸ்டடி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 2023, மே 12-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.