மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் K.மனோகரன் மற்றும் T.கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய ஹாரர் திரைப்படம் ‘சைத்ரா’.
இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன், விஜயலட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். ‘பொட்டு’ படத்திற்கு படத் தொகுப்பு செய்த எலிஷா இந்தப் படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.
பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி. இணை தயாரிப்பு – T. கண்ணன் வரதராஜ். தயாரிப்பு – K. மனோகரன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M.ஜெனித்குமார். இவர் ‘பொட்டு’, ‘கா’ போன்ற படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குநர் M. ஜெனித்குமார் பேசும்போது, “இத்திரைப்படம் 24 மணி நேரத்தில் நடக்கும் கதையில் உருவாகியுள்ளது. ‘பீட்சா’, ‘டீமாண்டி காலனி’ மாதிரியான வித்தியாசமான திரைக்கதையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.
இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது.
படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது..” என்றார் இயக்குநர் M.ஜெனித்குமார்.