full screen background image

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் துவங்கியது..!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் துவங்கியது..!
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க,  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உருவாகும் ‘பைசன் காளமாடன்’  திரைப்படம் இன்று இனிதே துவங்கியது!!
 

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு.K ஒளிப்பதிவு செய்கிறார், படத்தொகுப்பு –  சக்திகுமார், கலை இயக்கம் – மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன்,  ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

‘பரியேறும் பெருமாள்’ ப்ளாக் பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர் வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாகக் கொண்டு வருகிறது.

இந்த ‘பைசன் காளமாடன்’, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப் படைப்பாக,  மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6-ம் தேதி தொடங்கியது.

Our Score