full screen background image

“செல்வராகவன் ஸார்தான் எனது குரு..” -நெகிழும் இயக்குநர் ஜி.மோகன்

“செல்வராகவன் ஸார்தான் எனது குரு..” -நெகிழும் இயக்குநர் ஜி.மோகன்

நட்டி நட்ராஜ், இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் இயக்குநர் ஜி.மோகன் இயக்கியிருக்கும் புதிய படம் ‘பகாசூரன்’.

இந்தப் படத்தின் டீசர் நேற்றைக்கு வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வைகளை அந்த டீசர் பெற்றுவிட்டது.

இதையொட்டி இந்தப் படத்தின் இயக்குநர் ஜி.மோகன் பேசுகையில், “ஒரு குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு இந்தப் பகாசூரன்’ படத்தின் கதைக்காக இதில் நடித்துக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்புதான் இந்த பகாசூரன்’ திரைப்படம்.

செல்வராகவன் சார் இயக்கிய காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின்புதான் சினிமா மீது எனக்கு மோகம் ஏற்பட்டது.

நான் யாரிடமும் பணியாற்றமல் நேரடியாக இயக்குநரானாலும் செல்வராகவன் சார் அவர்களையே எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன்.

என் முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் டைட்டிலும், அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான ‘பட்டறை குமாரும்’ இவருடைய தாக்கம்தான்.

பின் ‘திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன். குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை.

அவருடன் இந்தப் பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து, ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டுமே இருந்தாரே தவிர, ஒரு நொடிகூட தன்னை இயக்குராகக் காட்டிக் கொள்ளவில்லை.

சின்ன கருத்து கேட்டால்கூட உங்கள் முடிவே இறுதியானது என்று நடிகராக மட்டுமே இருந்து இந்தப் படத்தை வேகமாக முடித்து தந்தார். அவர் நடிப்பைப் பற்றி நான் சொல்வதைவிட நீங்களே படம் பார்த்துத் தெரிந்து கொள்வீர்கள். காத்திருந்து பாருங்கள்..” என்றார்.

Our Score