நடிகை சுஜிபாலா, இயக்குநர் ரவிக்குமார் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும், அடித்ததாகவும், கொலை மிரட்டல் விட்டதாகவும் நேற்றைக்கு முன்தினம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.
இப்போது சுஜிபாலாவின் புகாருக்கு ‘உண்மை’ படத்தின் இயக்குநரான ரவிக்குமாரும் பதில் சொல்லியிருக்கிறார்.
அவர் அளித்திருக்கும் பதிலில் “நானும், சுஜிபாலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தது உண்மை. ‘உண்மை’ படத்தை தொடங்கிய போதே எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவரை நான் பெண் கேட்டேன். நிச்சயதார்த்தம் நடந்தது. சுஜிபாலா திடீரென்று தற்கொலைக்கு முயன்றதால் நாங்கள் பிரிய வேண்டியதாகிவிட்டது.
மறுபடியும், ‘உண்மை’ படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு பின் தொடங்கியபோது நாங்கள் இரண்டு பேரும் நெருங்கி பழகினோம். சுஜிபாலா என் மீது அன்பாக இருந்தார். எனக்கு அவர் தங்கச் சங்கிலி பரிசளித்தார். நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாகவே வாழ்ந்தோம். எங்களை சுஜிபாலாவின் தாயார்தான் பிரித்துவிட்டார்.
நான் ராயப்பேட்டையில் உள்ள நடனப் பள்ளிக்கு போனது உண்மை. பேஸ்புக்கில் சுஜிபாலா இன்னொரு ஆணுடன் கட்டிப் பிடித்தபடி இருந்ததை சுட்டிக்காட்டி, அவரிடம் நியாயம் கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘நான் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு வைத்திருப்பேன். அதை கேட்க நீங்கள் யார்…?’ என்று சுஜிபாலா கேட்டார். அந்த ஆத்திரத்தில் அவரை நான் அறைந்துவிட்டேன். ஆனால் கொலை மிரட்டல் விடுக்கவில்லை…” என்கிறார் ரவிக்குமார்.