நடிகை சோனா தற்போது தமிழ், மலையாளப் படவுலகில் குணச்சித்திரம், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சுயசரிதையை சினிமாவாகவோ அல்லது வெப் சீரீஸாகவோ தானே தயாரித்து இயக்கப் போவதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் நடிகை சோனா.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய கல்யாண கனவு நடக்காது. என்னென்னவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். அது இனிமேல் நடக்காதுன்னு எனக்கே தெரிஞ்சு போச்சு. அதனால் என்னோட சுயசரிதையை எழுதணும்ன்ற என்னோட ரொம்ப நாள் ஆசையை நான் இப்போ நிறைவேத்திட்டேன். கூடிய சீக்கிரம் அதை வெப் சீரீஸாகவோ, சினிமாவாகவோ எடுக்கப் போறேன்.
நான் ஏன் அதைப் பண்ணணும்ன்னு அவ்ளோ ஆசைப்படுறேன்னா எல்லாரும் மத்தவங்களை வெளிலதான பார்க்குறோம். இன்க்ளூடிங் நானும்தான்… ஒருத்தரைப் பார்த்து ஈஸியா அவர் அப்படித்தான்னு ஜட்ஜ் பண்ணிடறோம். ஆனால், அப்படி இல்லேன்னு சில விஷயங்கள் இருக்கு. அதைச் சொல்லணும். அதுக்காகத்தான் அந்தப் பிராஜெக்ட்டை பண்ணாத்தான் என் லைப்ல ஒரு நிம்மதி கிடைக்கும். It’s very close to my heart. அதை நானே இயக்குவேன்..” என்று தெரிவித்துள்ளார்.