full screen background image

“அஜித் அன்பானவர்; அடக்கமா்னவர்..” – சொல்கிறார் புதுமுக நடிகை பார்வதி நாயர்..

“அஜித் அன்பானவர்; அடக்கமா்னவர்..” – சொல்கிறார் புதுமுக நடிகை பார்வதி நாயர்..

பார்வதி நாயர். இறைவனின் தேசமான மலையாள தேசத்து தேவதை. தனது சின்ன வயது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என துவங்கி இப்போது நடிப்பு துறைக்கு வந்து தன்னை நிலைநிறுத்தியவர்.

அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை ஒரு பொறியாளர். தாய் கல்லூரி ஆசிரியர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் என்ஜீனியரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்திருந்தாலும் ஓவியம் தீட்டுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிப் பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.

தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்‘ படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்தின் அனுபவம் பற்றி கண்கள் மின்ன ஆர்வத்துடன் பேசுகிறார் பார்வதி.

parvathy nair-ajith-2

“காலம் என்னை கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் படமே அஜித் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. கௌதம் சார் இப்படத்திற்கு அழைக்கும்வரை தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.

parvathy nair-ajith-1

படப்பிடிப்புத் தளத்தில் அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது. கௌதம் சார், நான் பணிபுரிந்த இயக்குனர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர். அவர் இருக்கும்பொழுது படபிடிப்பு தளமே மிக பரப்பாக இருக்கும். ‘என்னை அறிந்தால்’ குழுவினருக்கும், தயாரிப்பாளர் A.M. ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும்… அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்…” என்கிறார் பார்வதி நாயர்.

Our Score