ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் கமல்ஹாசன் நேற்று காலை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சீக்கட்டி ராஜ்யம்’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாகத்தான் ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கச் சென்றேன்.
விஜயவாடாவில் எனது ‘சீக்கட்டி ராஜ்யம்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க வரும்படி முதல்வரை அழைத்தேன். அவரும் வருவதற்கு சம்மதித்துள்ளார்.
ஒரே நேரத்தில் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் ‘சீக்கட்டி ராஜ்யம்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் சிறப்புக் காட்சிகளில் பங்கேற்க வசதியாக 6 மணி நேர இடைவெளியில் சிறப்புக் காட்சிகளை ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம்..” என்று தெரிவித்துள்ளார்.