full screen background image

‘விடியும்வரை காத்திரு’ டைட்டிலில் புதிய படம்..!

‘விடியும்வரை காத்திரு’ டைட்டிலில் புதிய படம்..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி.சி.ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் ‘விடியும் வரை காத்திரு.’  

இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – சலீம், ஒளிப்பதிவு – சந்தோஷ், இசை – அஸ்வத், படத் தொகுப்பு – ஜெரோம் ஆலென், கலை இயக்கம் – நர்மதா வேணி, ஆடை வடிவமைப்பு – மின்னி பாஸ்டின், நிர்வாகத் தயாரிப்பு – அசோகன்.ஜி.

 

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “ஒரு நாள் இரவில் நடக்கும் முழு நீள திரில்லர் படமாக ‘விடியும் வரை காத்திரு’ இருக்கும்.  தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட் இருவரும் கார் மாறி ஏறி செல்கின்றனர். இந்தப் பயணத்தின்போது ஏற்படும் விளைவுகள்தான் இந்த படத்தின் மையக்கரு.

இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் வருண் இணைகிறார்.

விக்ராந்த் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் இருந்து விலகி இருந்த கார்த்திக்கை நான் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்தேன். இந்த திறமைசாலிகளுக்கு இப்படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நியூசிலாந்து நாட்டில் இருந்து நடிப்பதற்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் வருண். 

படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.  

பல வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘விடியும் வரை காத்திரு’. இதன் தலைப்பு எங்கள் படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தததால் அவரிடம் சென்று கோரிக்கை வைத்தோம். முழு மனதோடு இந்த தலைப்பை அவர் எங்களுக்கு வழங்கினார்.  

வரும் ஜூலை 23-ம் தேதியன்று இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது. ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் என்பதால் அதிகமான காட்சிகள் இரவில் படமாக்கப்படவுள்ளன. முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் அக்டோபர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது…” என்று அவர் கூறினார்.

Our Score