full screen background image

சன் டிவியில் புதிய மெகாத் தொடர் ‘இலக்கியா’

சன் டிவியில் புதிய மெகாத் தொடர் ‘இலக்கியா’

சன் TV- யில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 2 மணியளவில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்ற சந்திரலேகா தொடர் வரும் அக்டோபர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அக்டோபர் 10-ம் தேதி முதல் திங்கள் முதல் சனிவரை மதியம் 2 மணிக்கு இலக்கியா என்ற புத்தம் புதிய மெகாத் தொடர் ஒளிபரப்பாகிறது.

இந்த மெகாத்  தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள் கதாசிரியர்கள்.

பிரபலமான பல டிவி தொடர்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல கலைஞகள் இந்தத் தொடரிலும் பணியாற்றுகிறார்கள்.

தந்தை கைவிட்டதால், இலக்கியாவின் குடும்பம் தாய் மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அத்தை சிந்தாமணி எப்போதும்  அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக் கொண்டே இருப்பாள்.

சிறு   வயதில் தங்களை காப்பாற்றிய தாய் மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறாள்.

தான் பல  வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள்.

இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள்.

கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக் கொள்ள முடியாமல்   தாய் மாமன் மகள் அஞ்சலி பிரச்சினை செய்கிறாள்.

நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.

இலக்கியா இது அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப் பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள்.?

அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது.

இத்தொடரில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமா பிந்து, சுஷ்மா, டெல்லி கணேஷ், சதிஷ், பரத் கல்யாண், ராணி, காயத்ரி ப்ரியா, மீனா மற்றும் முன்னணி  நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 
சரிகம இண்டியா லிமிடெட் சார்பாக B.R.விஜயலட்சுமி இத்தொடரை தயாரிக்கிறார்.
 
கதை – சரிகம கதை இலாகா, 
திரைக்கதை – கலைமாமணி சேக்கிழார், வசனம் – குரு சம்பத்குமார், இயக்கம் – சாய் மருது, கிரியேட்டிவ் ஹெட் – பிரின்ஸ் இமானுவேல்.

Our Score