full screen background image

42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம்

42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வருகிறது ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம்

தமிழ்த் திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘‘உயிருள்ளவரை உஷா’.

இந்நிலையில் கிட்டத்தட்ட 42 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இது குறித்து நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது, ”‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தை தற்போதையை 4-கே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து, எனது பழைய படங்களை ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய உள்ளேன். அதற்காக, டி.ஆர்.டாக்கீஸ் என்ற நிறுவனத்தையம் தொடங்கி இருக்கிறேன்.

குடும்ப திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் வரவேற்பு அதிகம் உள்ளது. இந்த படத்தின் 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அடுத்த மூன்று ஆண்டிற்குள் தனது டி.ஆர்.கார்டனில் பிரம்மாண்டமான செட் அமைத்து விடுவேன். தொடர்ந்து, புதிய காதல் திரைப்படம் ஒன்று எடுக்க தயாராகி வருகிறேன்..” என்றார்.

Our Score